வேலூரில் 3ஆவது முறையாக நிலஅதிர்வு - பீதியில் மக்கள்!!

 
ttn

வேலூர் மாவட்டத்தில் 3 வது முறையாக நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

earth

வேலூரில் இருந்து 50 கிலோமீட்டர் மேற்கு வடமேற்கு பகுதியில் நேற்று முன்தினம் நில அதிர்வு ஏற்பட்டது. அதேபோல் கடந்த மாதம் 29ம் தேதி குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்தனர்.

earth

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில்குடியாத்தம் அருகே பேரணாம்பட்டு,  தரைக்காடு ஆகிய  இடங்களில், இரண்டு முறை சுமார் மூன்று வினாடிகள் நில அதிர்வை உணர்ந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர். காலை 9.30  மணி அளவில் அடுத்தடுத்து இரண்டு முறை லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் அப்பகுதி வாசிகள் பீதியில் உள்ளனர். பேரணாம்பட்டு சுற்று வட்டாரத்தில் கடந்த சில தினங்களில் மட்டும் மூன்று முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த நவம்பர் 29 மற்றும் டிசம்பர் 23 ஆகிய தேதிகளில் வேலூரில் நில அதிர்வு ஏற்பட்ட நிலையில் 3ஆவது முறையாக நில அதிர்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.