#JUST IN : சென்னையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து - மீட்பு பணிகள் தீவிரம்

 
Building

சென்னை பிராட்வேயில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளான நிலையில், அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  

சென்னை பிராட்வே அரண்மனைக்காரன் தெருவில் உள்ள பழைய கட்டிடத்தின் 4வது தளத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் வழக்கம் போல் பணியாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதனால் அந்த பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சி அளித்தது. மேலும் இந்த கட்டிடம் இடிந்து தரைமட்டமானது குறித்து தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளில் யாராவது சிக்கி உள்ளார்களா என தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கட்டிட விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.  மேலும் இடிபாடுகளில் யாரும் சிக்கி உள்ளார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்