வாழப்பாடி அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து.. 43 பேர் காயம்...
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் எதிர்பாராத விதமாக அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 43 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசு சொகுசுப் பேருந்து ஒன்று திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை 4 மணியளவில் எதிரே அதிவேகமாக வந்த கார் மீது மோதாமல் இருக்க ஓட்டுனர் பேருந்தை திருப்பியிருக்கிறார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 23 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் 20 பேருக்கு லேசான ஏற்பட்டுள்ளது. அனைவரும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட தகவலில் இருவழிச்சாலையில் பேருந்தை இயக்கியதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
இந்த விபத்தில் சிக்கிய ஓட்டுனரும், நடத்துனரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.