தமிழகத்தில் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் - அரசு அதிரடி உத்தரவு

 
assembly

தமிழகத்தில் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் மற்றும் பதவி உயர்வு செய்து தமிழக அரசு அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழக அரசின் கீழ் பணியாற்றி வரும் இந்திய ஆட்சி பணி அதிகாரிகளை, அவர்களின் செயல் மற்றும் திறமையை பொறுத்து மாநில அரசு பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் செய்து வருகிறது.  இந்த நிலையில், 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் மற்றம் பதிவி உயர்வு வழங்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் உத்தரவின் படி அரவிந்தன், விக்ரமன், சரோஜ்குமார் தாக்கூர், மகேஷ்குமார், கல்பனா நாயகர், வன்னிய பெருமாள், பிரவீன்குமார், அபிநபு, பகலவன், மயில்வாகனன் ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் அதிவீரபாண்டியன், ஷியாமளா தேவி, ராஜேந்திரன், மோகன்ராஜ் உள்ளிட்டோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.