சென்னையில் 3 நாட்கள் மலர் கண்காட்சி - 45 ஆயிரம் கண்டுகளிப்பு!!

 
tn

சென்னையில் 3 நாட்கள் நடைப்பெற்ற மலர் கண்காட்சியை சுமார் 45 ஆயிரம் பொதுமக்கள் கண்டுகளித்துள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் அன்று சென்னையில் மலர்கண்காட்சி தொடங்கப்பட்டது. சென்னை  கலைவாணர் அரங்கில் தொடங்கிய மலர் கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது.  இந்த மலர் கண்காட்சிக்காக ஊட்டி, ஓசூர், திண்டுக்கல், பெங்களூரு, புனேவிலிருந்து சுமார் 200 வகையான மலர்கள் கொண்டு வரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன. 

tn

கோடைக் காலம் என்பதால் மலர்கள் வாடி விடும் என்ற காரணத்தினால்  குளிரூட்டப்பட்ட உள்ளரங்கில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டது . இங்கு பொதுமக்கள் வந்து பார்வையிட மாணவர்களுக்கு 20 ரூபாயும் ,பெரியவர்களுக்கு 50 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. 

tn

கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற மலர் கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில் சுமார் 45 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர் . ஆண்டுதோறும் இதேபோல் மலர் கண்காட்சி நடத்த தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.