ஆட்டோ மீது மின்வயர் விழுந்து 5 பேர் உயிரிழப்பு - ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!!

 
jagan mohan reddy

ஆந்திராவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 5 பேர் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்து விபத்து: ஆந்திராவில் 8 பேர் உடல் கருகி பலி..

ஆந்திர பிரதேசம் சத்யசாய் மாவட்டத்தின் சில்லக்கொண்டபள்ளி கிராமத்தைச் சேர்ந்த 5 கூலி தொழிலாளர்கள்  இன்று காலை விவசாய பணிக்காக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.  அப்போது அப்பகுதியில் இருந்த மின்கம்பத்தில் சென்று கொண்டிருந்த மின்சார வயர் அறுந்து சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது விழுந்தது.  இதனால் ஆட்டோ முழுவதும் மின்சாரம் பாய்ந்து ,  திடீரென ஆட்டோ தீப்பற்றி எரிந்தது.  இதில் பயணித்த கூலி தொழிலாளர்கள் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர்.  தீயில் கருகி உயிரிழந்த தொழிலாளர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை பெற்று வருகிறது.

ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்து விபத்து: ஆந்திராவில் 8 பேர் உடல் கருகி பலி..

இந்நிலையில் ஆந்திராவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 5 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.