கோவை ஜாஸ் ஆலுகாஸ் நகைக்கடை கொள்ளை - 5 தனிப்படைகள் அமைப்பு

 
Jos Alukas

கோவை ஜாஸ் ஆலுகாஸ் நகைக்கடை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

கோவை காந்திபுரம் பகுதியில் ஜோஸ் ஆலுகாஸ் இயங்கி வருகிறது. வழக்கம் போல் இன்று காலை ஊழியர்கள் கடையை திறந்து பார்த்த போது கடையில் உள்ள நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதனையடுத்து ஜோஸ் ஆலுகாஸ் சார்பில் காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் 100 சரவன் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மோப்ப நாய்களுடன் சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.  

jos alukas

இந்த நிலையில்,  கோவை ஜாஸ் ஆலுகாஸ் நகைக்கடை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடையின் 2 மற்றும் 3வது தளத்தில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது எனவும், கடையின்  வெண்டிலேட்டர் துளை வழியாக சென்று கொள்ளை அடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நபர் கடைக்குள் புகுந்து கொள்ளை அடித்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.