அதிமுக பொன்விழா : ஓபிஎஸ் - ஈபிஎஸுக்கு சவால் கொடுக்கும் சசிகலா

 
tri


அதிமுகவின்  50வது ஆண்டு பொன்விழா இன்று தமிழகம் முழுவதும் அக்கட்சியினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.   பொன்விழா ஆண்டையொட்டி சென்னை திநகரில் உள்ள  எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்கு வருகை தந்த சசிகலா அதிமுக கொடியேற்றினார். இதையடுத்து எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செய்தார்.இதற்கான கல்வெட்டில், அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா எனப் பொறிக்கப்பட்டுள்ளது. 

aa

இதேபோல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு ஓபிஎஸ் - ஈபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அத்துடன் அதிமுக பொன்விழா ஆண்டின் சிறப்பு மலரையும் வெளியிட்டனர். 

tt
இந்நிலையில் அதிமுக பொன்விழாவை ஒட்டி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதேபோல் ராமாபுரம் தோட்டத்திலுள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் சசிகலா. அவர் அங்கு சென்ற போது அதிமுக தொண்டர்கள் பலத்த வரவேற்பு அளித்ததுடன், நிரந்தர கழகப் பொதுச் செயலாளர் என தொண்டர்கள் முழக்கமிட்டனர்.அத்துடன் அதிமுக பொன்விழா சிறப்பு மலரையும் சசிகலா வெளியிட்டார்.இப்படி அதிமுக இரட்டை தலைமைக்கு போட்டியாக சசிகலாவுக்கு பொன்விழா நாளில் வலம்வருவது குறிப்பிடத்தக்கது