இந்திய உணவுக் கழகத்தில் 5,043 காலிப்பணியிடங்கள்..

 
இந்திய உணவுக் கழகத்தில் 5,043 காலிப்பணியிடங்கள்.. இந்திய உணவுக் கழகத்தில் 5,043 காலிப்பணியிடங்கள்..

இந்திய உணவுக் கழகத்தில் உதவியாளர், இளநிலை பொறியாளர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட  காலியாக உள்ள 5,043  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  நாடு முழுவதும்   5 மண்டலங்களிலும் இந்திய உணவுக் கழகத்தின் இந்த ஆள்சேர்ப்பு நடைபெற உள்ளது.  

நிறுவனத்தின் பெயர்: இந்திய உணவுக் கழகம் (FCI)

மொத்த காலி பணியிடங்கள்: 5,043

பணியிடங்களின் விவரம்:

வடக்கு மண்டலம் ( டெல்லி, பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட   மாநிலங்கள் )  -  2,388

தெற்கு மண்டலம் ( தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் )  - 989  

கிழக்கு மண்டலம்  ( பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் ) -  768  

மேற்கு மண்டலம் ( குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் )  -   713  

வடகிழக்கு மண்டலம் (  அசாம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்கள்  ) -   185  

வேலைவாய்ப்பு

வேலையின் பெயர்  :  இளநிலை பொறியியாளர் சிவில் , எலெக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் என்ஜினியரிங், சுருக்கெழுத்தாளர் நிலை- 2 ,  உதவியாளர்  நிலை - 3  பொது,  உதவியாளர் நிலை 3- கணக்கு  ; உதவியாளர் நிலை  3  - டெக்கினிக்கல் ,  உதவியாளர் நிலை 3 - உணவு தானிய கிடங்குகள்,  உதவியாளர் நிலை  3(இந்தி).  

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி  :  06 செப்டம்பர் 2022

விண்ணப்பிக்க  கடைசி தேதி  :  05 அக்டோபர் 2020 ( மாலை 4 மணி  வரை )
 

விண்ணப்பக் கட்டணம்:  ரூ. 500 /- ,  பட்டியலினத்தவர்கள்,  பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர்,  மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.  

விண்ணப்பிக்கும் முறை  : ஆன்லைன் முறை .   விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு மண்டலத்தில் ஒரு பணியிடத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.  

வேலைவாய்ப்பு

வயது வரம்பு:

இளநிலை பொறியியாளர் -  28-க்குள் இருக்க வேண்டும்.

சுருக்கெழுத்தாளர் - 25 மிகாமல்  இருக்க வேண்டும்.

உதவியாளர் நிலை 3 -   27-க்கு கீழ் இருக்க வேண்டும்.

அரசு நிர்ணயித்துள்ளபடி  குறிப்பிட்ட விண்ணப்பதாரகளுக்கு வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படுகிறது.  

 கல்வித் தகுதி:    அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க  இருக்க வேண்டும்.  இதர பதவிகளுக்கு பணிக்கு தொடர்புடைய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:  2 கட்டங்களாக நடைபெறும் எழுத்துத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.   தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.  

மேலும் விவரங்களுக்கு http://www.fci.gov.in என்கிற இணைதள பக்கத்திற்குச் சென்று தெரிந்துகொள்ளலாம்.