மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 540 காலிப்பணியிடங்கள்..
மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள உதவி துணைக் காவல் ஆய்வாளர்( Assistant - Sub Inspector) மற்றும் காவல்துறையின் தலைமை காவலர் பதவிகளுக்கான (Head Constable - Ministerial) ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
துறை : மத்திய தொழில் பாதுகாப்பு படை
காலிப்பணியிடங்கள் : 540
மாத சம்பளம் :
துணைக் காவல் ஆய்வாளர் பணி - நிலை 5 ரூ. 29,200- ரூ. 92,300/-
தலைமை காவலர் பதவி - நிலை 4: ரூ. 25,500- ரூ. 81,100/
விண்ணப்பிக்க கடைசி தேதி : 25 அக்டோர்பர் 2022
வயது வரம்பு: 18க்கு மேல் 25க்கு கீழ் இருக்க வேண்டும். பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் பிரிவினருக்கு வயது வரம்புல் 5 ஆண்டுகள் வரையிலும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வரையிலும் தளர்வுகள் அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் .
விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியான தேதிக்கு முன்பாக 3 மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும்.. 3 மாதத்துக்கு மேல் பழையதாக இருக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை : உடல்தகுதித் தேர்வு, கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு , திறனறிவுத் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவை நடைபெறும், குறிப்பாக எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயார் செய்யப்படும்.
மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணபிக்க மத்தியல் தொழில் பாதுகாப்பு படையின் www.cisfrectt.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் சென்று பார்க்கலாம்..