ஹெச். ராஜாவுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை - சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

 
H Raja H Raja

பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாவுக்கு  ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

பாஜக மூத்த தலைவராஜ ஹெச்.ராஜா பெரியார் சிலையை உடைப்பேன் என பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதேபோல் திமுக எம்.பி. கனிமொழி குறித்தும் ஹெச்.ராஜா அவதூறாக பேசி இருந்தார். இது தொடார்பாக பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், இரண்டு வழக்குகளிலும் தலா 6 மாதம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது.  

கடந்த 2018-ம் ஆண்டு பெரியார் சிலையை உடைப்பேன் என்றும், கனிமொழி எம்.பி. குறித்து அவதூறாகவும் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட பாஜக நிர்வாகி எச்.ராஜா, குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 6 மாத சிறை தண்டனை வழங்கியது. அவரது சமூக வலைதளத்தில் இருந்து அந்த இரு பதிவுகளும் வெளியானதாக காவல்துறை ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த நிலையில், நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.