7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு..

 
 3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு அரசாணை.. 


தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து அமைச்சரவையில் மாற்றம், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்  என பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  அந்தவகையில் தற்போது 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  அதன்படி, போக்குவரத்து துறை செயலராக உள்ள பணீந்திர ரெட்டிக்கு , தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை செயலராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதிதாக 3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு அரசாணை.. 

மேலும், போக்குவரத்து துறை ஆணையராக சண்முகசுந்தரம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  அதேபோல்  சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளிப்பு துறை ஆணையராக ஜெயகாந்தன் ஐஏஎஸ்-ம்,  மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையராக ரத்னா ஐஏஎஸ்-ம் நியமிக்கப்பட்டிருகின்றனர்.  புவியியல் மற்றும் கனிமவளத்துறை இயக்குனராக எல்.நிர்மல்ராஜ்  நியமிக்கப்பட்டிருக்கிறார். சிம்ரன்ஜீத் சிங் கஹ்லோன் - சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் நிர்வாக இயக்குநராகவும்,  பாலசந்தர் - சேலம் மாநகராட்சி ஆணையாராகவும், மதுரை மாநகராட்சி ஆணையராக கே.ஜே.பிரவீன்குமாரும்  நியமிக்கப்பட்டுள்ளனர்