எலி மருந்து குடித்து 7 மாத கர்ப்பிணி தற்கொலை

 
r

 7 மாத கர்ப்பிணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.   குடும்பத்தில் கணவன் -மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனையால் தான் தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்திருக்கிறது .  அரக்கோணம் பகுதியில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 அரக்கோணம் அடுத்த அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மோகனா.  23 வயதான மோகனாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடந்துள்ளது.   மூர்த்தி ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.   மோகனா 7  மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

ar

 இந்த நிலையில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார் மூர்த்தி.   ஊருக்கு வந்ததும் மூர்த்திக்கும் மோகனாவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து இருக்கிறார் மோகனா.  மன உளைச்சல் அதிகமாகவே தற்கொலை முடிவுக்கு சென்ற அவர் எலி மருந்து குடித்து இருக்கிறார்.  இதை தெரிந்துகொண்ட உறவினர்கள் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்து உள்ளனர். 

 அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.  மேலும்,  அவரது வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர் .

இதையடுத்து  மருத்துவமனை நிர்வாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து இருக்கிறது.   இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   திருமணமாகி நான்கு ஆண்டுகளுக்குள் தற்கொலை செய்து கொண்டிருப்பதால் கோட்டாட்சியர் விசாரணைக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.