சென்னையில் 7ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!

 
Suicide

சென்னையில் 7ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த் மூர்த்தி என்பவரது மகள் தீப்திகா. இவர் மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய தீப்திகா, பின்னர் தோழியின் வீட்டிற்கு படிக்க சென்றுள்ளார். இதனையடுத்து இரவு 7 மணி அளவில் வீடு திரும்பிய தீப்திகா வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வெளியே விளையாட சென்றுவிட்டு இரவு 8 மணி அளவில் வீட்டிற்கு வந்த பார்த்த தீப்திகாவின் அண்ணன் ரித்தீஸ் தங்கையை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. 

இதனையடுத்து பூட்டியிருந்த கதவை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தீப்திகா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இது தொடர்பாக உடனடியாக ஐ ஹவுஸ் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார் அந்த சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்ப்பி வைத்தனர். மேலும் சிறுமியின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதால், சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளனர். 7ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.