திருவண்ணாமலை : கார் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் பலி!

 
accident

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அந்தனூர் நெடுஞ்சாலையில் பெங்களூரு நோக்கி கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த காரில் சுமார் 8 பேர் பயணம் செய்தனர். இந்த நிலையில், எதிரே அதிவேகமாக வந்த வந்த லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த கார் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெண்கள், 2 ஆண்கள் மற்றும் 3 குழந்தைகள் என 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பெண் ஒருவர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவரும் சிகிச்சை பலைன்றி உயிரிழந்தார். 

தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த செங்கம் போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து விபத்துக்குள்ளான லாரி மற்றும் காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.