அண்ணனுக்கு 80வது பிறந்தநாள்.. தங்கத்தால் அபிஷேகம் செய்த ரஜினிகாந்த்.. வைரலாகும் ஃபோட்டோஸ்..

 
 rajinikanth

ரஜினிகாந்த்  அவரது அண்ணன் சத்யநாராயணாவின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அண்ணனுக்கு 80வது பிறந்தநாள்..  தங்கத்தால் அபிஷேகம் செய்த ரஜினிகாந்த்..  வைரலாகும் ஃபோட்டோஸ்..

அண்ணாத்த படத்துக்கு பின்னர் ரஜினி நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர்.   சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். ரஜினியுடன் மோகன்லால், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியில் விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது. 

அண்ணனுக்கு 80வது பிறந்தநாள்..  தங்கத்தால் அபிஷேகம் செய்த ரஜினிகாந்த்..  வைரலாகும் ஃபோட்டோஸ்..

இதன் காரணமாக   ரஜினிகாந்த் கடந்த சில நாட்களாக பெங்களூரில் தங்கியிருக்கிறார்.  ஜெயிலர் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் ரஜினிகாந்த்,  தனது அண்ணன் சத்யநாராயணாவின் பிறந்தநாள் விழாவில்  கலந்துகொண்டிருக்கிறார். ரஜினியின் மிகப்பெரிய பலமாக இருப்பவர்  அவரது அண்ணன் சத்யநாராயணா தான் என்று சொல்லப்படுவதுண்டு.  தனது பெற்றோருக்கு இணையாக அண்ணன் சத்யநாராயணா மீது நடிகர் ரஜினிகாந்த், மிகுந்த மரியாதையும் , பாசமும்  வைத்துள்ளார். 

அண்ணனுக்கு 80வது பிறந்தநாள்..  தங்கத்தால் அபிஷேகம் செய்த ரஜினிகாந்த்..  வைரலாகும் ஃபோட்டோஸ்..

சத்யநாராயணா கர்நாடக மாநில அரசின் சுகாதாரத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். அவர் நேற்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார். அதுமட்டுமின்றி,  அவரது மகன் ராமகிருஷ்ணாவும் நேற்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார்.  இந்நிலையில், 80வது பிறந்தநாள் கொண்டாடிய அண்ணன் சத்யநாராயணாவுக்கு தங்க காசுகளால் ரஜினி அபிஷேகம் செய்திருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

அண்ணனுக்கு 80வது பிறந்தநாள்..  தங்கத்தால் அபிஷேகம் செய்த ரஜினிகாந்த்..  வைரலாகும் ஃபோட்டோஸ்..

அத்துடன்,  ஒரேநாளில் பிறந்தநாள் கொண்டாடிய அண்ணன் மற்றும் அண்ணன் மகன் இருவரையும்  வாழ்த்தி ரஜினிகாந்த்  ட்விட் செய்திருக்கிறார்.  அவர் தனது வாழ்த்து பதிவில், “ எனது சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட்டின் 80வது பிறந்தநாளையும், அவரது மகன் ராமகிருஷ்ணாவின் 60வது பிறந்தநாளையும் ஒரே நாளில் எனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கொண்டாடினோம். இன்று நான் இப்படியிருக்க காரணமான தங்க இதயத்திற்கு, தங்கமழை பொழிவதை பாக்கியமாக உணர்ந்தேன்.” என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.