மழையால் ஒத்திவைக்கப்பட்ட 8 -ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு..

 
நீட் தேர்வு
தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 20 ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தனித் தேர்வர்களுக்கான 8 ம் வகுப்பு பொதுத்தேர்வு நவம்பர் 8 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. அப்போது
தமிழகத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்ததன் காரணமாக   எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா அறிவித்தார்.

மாணவர்கள் தேர்வு

இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் டிசம்பர் 20 முதல் 24ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் புதிய ஹால் டிக்கெட்டை வரும் 14ஆம் தேதி முதல் http://dge.tn.gov.in  இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுகள் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

1