தமிழகத்தை சேர்ந்த 2 காவல்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்!!

 
cops

குடியரசு தினத்தை ஒட்டி தமிழகம் உட்பட நாடு முழுவதும் 939 காவல்துறையினருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

central

நாட்டின் 73-வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்படுகிறது.  டெல்லி ராஜபாதையில் நடைபெறும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கஜகஸ்தான், கிர்கிஸ்தான்,தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட 5 மத்திய ஆசிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். தலைநகர் டெல்லியில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்பட உள்ள நிலையில்.  குடியரசுத் தலைவர் மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான ராஜபாதையில் முப்படைகளின் அணிவகுப்பு மற்றும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற உள்ளது.

POLICE

இந்நிலையில் குடியரசு தினத்தை ஒட்டி தமிழகம் உட்பட நாடு முழுவதும் 939 காவல்துறையினருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காவல் துறையை சேர்ந்த 20 பேருக்கு சிறந்த சேவைக்கான காவல்துறை பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் குடியரசுத்தலைவரின் மெச்சத்தக்க சேவை காண சிறப்புப் பதக்கம் 88 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏடிஜிபி வெங்கட்ராமன் , சிஐடி சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சிவன் அருளுக்கும் ஜனாதிபதி பதக்கம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறந்த சேவைக்கான காவல்துறை பதக்கம் தமிழகத்தை சேர்ந்த 18 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் , மேற்கு மண்டல ஐஜி  சுதாகர் உள்ளிட்டோருக்கு பதக்கங்களை அறிவித்துள்ளது  மத்திய அரசு.