மாணவனுடன் மாயமான ஆசிரியை - அதிர்ச்சியில் பெற்றோர் ; வலைவீசும் போலீசார்!!
11ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் 26 வயதுடைய பள்ளி ஆசிரியை மாயமாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவன் ஒருவர் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். 17 வயதான இவர் கடந்த 5ம் தேதி பள்ளிக்கு சென்ற நிலையில் மாலை வீடு திரும்பி விட்டு, விளையாட செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். விளையாட சென்ற மாணவன் மறுபடியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிய பெற்றோர் நண்பர்களின் வீடுகளிலும் சென்று பார்த்துள்ளனர். ஆனால் மாணவன் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
அதேசமயம் மாணவன் காணாமல் போன சமயத்தில் அதே பள்ளியில் மாணவனுக்கு வகுப்பு எடுக்கும் 26 வயதுடைய ஆசிரியை ஒருவரும் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போலீசார், மாணவன் மாயமான நாளில் ஆசிரியையும் மாயமானதை உறுதி செய்தனர்.
அத்துடன் ஆசிரியை காணாமல் போனது குறித்து அவரது குடும்பத்தினர் புகார் அளிக்காதது கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
துறையூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஆசிரியை எம்ஏ., பிஎட்., படித்துவிட்டு கடந்த 6 ஆண்டுகளாக பள்ளியில் பணிபுரிந்து வருவதாகவும் , ஆசிரியையும் , மாணவரும் ஒரேநாளில் மாயமாகி உள்ளதால் இருவரும் சேர்ந்தே சென்றிருக்கலாம் எனவும் போலீசார் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. இதனால் அவர்களை தேடும் பணியை போலீசார் துரிதப்படுத்தியுள்ளனர்.