வெடிகுண்டு தயாரிப்பது பற்றிய புத்தகம்! வாட்ஸ் அப் தகவலை அளித்த முபின் கூட்டாளி

 
க்

 கோவை கார்குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குன்னூர் ஆட்டோ டிரைவர் உமர் பாருக் சம்பவம் நடந்ததும்  வாட்ஸ் அப் தகவல் பரிமாற்றத்தை அழித்தது என்.ஐ.ஏ. விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

 கோவை மாவட்டத்தில் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த அக்டோபர் 23ஆம் தேதி அன்று நடந்த கார் குண்டு வெடிப்பில் ஐ. எஸ். தீவிரவாதி முபின் என்கிற வாலிபர் உயிரிழந்தார்.  இதை அடுத்து நடந்த விசாரணையில் கூட்டாளிகளுடன் சேர்ந்து கோவில்கள் அரசு அலுவலகங்களில் குண்டு வைக்கவும் தற்கொலை படை தாக்குதல் நடத்தவும் முபின் திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது. 

ஒ

 போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் முபின் உறவினர்கள்  இருவர் உட்பட  6 பேர் கைது ஆனார்கள்.   போலீசார் நடத்தி வந்த இந்த வழக்கு பின்னர் என். ஐ. ஏ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.  இதை அடுத்து போத்தனூரைச் சேர்ந்த முகமது தவுபீத்,  நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த உமர் பாரூக்,  உக்கடத்தைச் சேர்ந்த பெரோஸ்கான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 கார் குண்டு வெடிப்பில் பலியான முபின் செல்போன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.   அதில் அவர் குன்னூர் உமர் பாருக்குடன் அடிக்கடி பேசி இருப்பது உறுதியானது. இருவரும் அடிக்கடி வாட்ஸ் அப்பில் உரையாடி இருக்கிறார்கள்.  இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அடிக்கடி கோவை குன்னூர் என்று மாறி மாறி பயணம் செய்து சந்தித்துக்கொண்டதும்,  விசாரணையில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 

 கார்குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தவுடன் வாட்ஸ் அப் தகவல் பரிமாற்றத்தை உமர் பாரூக் அழித்ததை என்.ஐ.ஏ போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.  முபின் சதித்திட்டத்தில் உமர் பாரூக் முக்கிய கூட்டாளி என்பதை புரிந்து கொண்டிருக்கிறார்கள்.  இதை அடுத்து அவரை கைது செய்துள்ளனர்.

முபின் தனது நண்பர் முகமது தவ்பிக்கிடம் ஒரு புத்தகம் கொடுத்து இருக்கிறார்.  அந்த புத்தகத்தில் வெடிகுண்டு செய்வது தொடர்பான விவரங்கள் இடம்பெற்றிருக்கின்றன.  இதை அடுத்து முகமது தவ்பிக் வீட்டில் நடத்திய சோதனையில் குறிப்பிட்ட அந்த புத்தகம் மட்டுமல்லாது  மத அடிப்படை வாதம் தொடர்பான பிரசுரங்களும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. 

 இதன் பின்னர் தவ்பிக்கிற்கும் சதித்திட்டத்தில் பங்கு இருப்பதை உறுதி செய்துள்ளனர்.   அதனால் அவரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.  இந்த மூவரையும் கஸ்டடியில் வைத்து விசாரிக்க  என். ஐ. ஏ போலீசார் முடிவு செய்துள்ளனர்.