காதலியை கத்தியால் குத்திய காதலன் - வேலூரில் பயங்கரம்!!

 
tn

வேலூர் காதல் பிரச்சனையால் கல்லூரி மாணவியை காதலன் கத்தியால்  குத்தியுள்ளார்.
 

tn

வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த குப்பத்தாமோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்.  இவர் தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார் . அதே பகுதியை சேர்ந்த யாஷினி என்ற மாணவி நர்சிங் கல்லூரியின் படித்து வந்துள்ளார்.   இந்த சூழலில் யாஷினி  திருவலம் காவல் நிலையம் சாலையில் உள்ள தனது தோழியிடம் பேசிக் கொண்டிருந்தபோது தூரத்திலிருந்து சதீஷ் ஓடி வந்து அவரிடம் கடும் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது . பின்னர் எதிர்பாராத விதமாக ததான்  மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து யாஷினியின் கழுத்து  மற்றும் முகம்  பகுதிகளில் கடுமையாக குத்தியுள்ளார்.  ரத்த வெள்ளத்தில் நிலை குலைந்து  விழுந்த யாஷினி சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

murder

இதனிடையே  அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற சதீஷை அப்பகுதி மக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில்,  சதீஷ்  யாஷினியும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் , இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாகவும் தெரிகிறது.  இதுகுறித்து போலீஸ் விசாரணையில் கூறிய சதீஷ், நானும் கல்லூரி மாணவியும் காதலித்து வந்தோம். திடீரென அவர் என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். மேலும் அவர் வேறு ஒரு மாணவருடன் அடிக்கடி பேசுகிறார். அவர் அந்த மாணவரை காதலிப்பதாக எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது பற்றி நான் கேட்டபோது எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் யாஷினியை  கத்தியால் குத்தினேன் என கூறியுள்ளார். தொடர்ந்து மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.