ரஜினிக்காக 30 ஆண்டுகளாக வாக்களிக்காமல் இருந்த ரசிகர்

 
ri

அரசியலுக்கு வருகிறேன் என்று ரஜினிகாந்த் கடந்த  30 ஆண்டுகளுக்கு மேலாக சூசகமாக சொல்லி வந்ததை நம்பி வந்த வந்தனர் அவரது ரசிகர்கள்.  இதனால் என்றைக்கு ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கிறாரோ அன்றைக்குத்தான் அவரது கட்சிக்குத் தான் தனது முதல் வாக்கை செலுத்த வேண்டும் என்று காத்திருந்து.. காத்திருந்து... காத்திருந்து.... ஏமாந்து போன ரசிகர் ஒருவர் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனது முதல் வாக்கை பதிவு  செய்திருக்கிறார்.

 அந்த ரசிகர் புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபால புரத்தைச் சேர்ந்த மகேந்திரன்.   ரஜினியின் தீவிர ரசிகரான இவர் என்றைக்கு ரஜினி அரசியலுக்கு வருகிறாரோ அன்றைக்குத் தான் தன்னுடைய முதல் வாக்கை செலுத்துவேன் என்று 30 ஆண்டுகளாக பிடிவாதமாக இருந்திருக்கிறார்.

ra

 தனது மனைவி தேர்தலில் போட்டியிட்டபோது கூட மகேந்திரன் வாக்கு செலுத்தவில்லையாம்.   அந்த அளவுக்கு தீவிரமான ரஜினி ரசிகர் மகேந்திரன்,   அரசியலுக்கு வரப்போவதில்லை என்று உறுதியாக அறிவித்ததால் மிகவும் ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்.   

 இதையடுத்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டிருக்கிறார்.   கடந்த 30 ஆண்டுகளாக வாக்கு செலுத்தாமல் இருந்த மகேந்திரன் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதுக்கோட்டை 22வது வார்டு ராஜகோபாலபுரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் அமைந்திருக்கும் வாக்குப்பதிவு மையத்திற்கு சென்று தனது முதல் வாக்கை பதிவு செய்திருக்கிறார்.