வங்கக்கடலில் உருவாகிறது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

 
rain

வங்க கடலில் வருகின்ற 20ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  

rain

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

rain

நாளை மற்றும் நாளை மறுநாள் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Rain

இந்நிலையில் வங்க கடலில் வருகின்ற 20ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி  வரும் 20ம் தேதி வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.