மகனை தீண்ட முயன்ற பாம்பு....தாயின் வீர தீர செயலால் தப்பிய மகன்... அதிர்ச்சி வீடியோ

 
snake

வீட்டு வாசலில் பாம்பு ஒன்று நிற்பதை கவனிக்காமல் நடந்து சென்ற மகனை தாய் ஒருவர் மின்னல் வேகத்தில் சென்று காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பது பழமொழி. அதற்கு காரணம் பாம்பு என சொன்னாலே அனைவருக்கும் ஒரு பயம் வரும். அதிலும் நிஜத்தில் பாம்பை கண்டால் பெரும் அதிர்ச்சி நம்மிடம் தோன்றிவிடும். அந்த அளவிற்கு பாம்பு என்றால் அனைவருக்கும் ஒருவிதமான பயம் உண்டு. இந்நிலையில், வீட்டில் இருந்து வெளியே ஒரு சிறுவன் தாயுடன் சென்றுகொண்டிருக்கின்றான். அப்போது அந்த வீட்டு வாசலில் ஒரு பாம்பு ஒன்று நிற்கிறது. இதனை கவனிக்காத அந்த சிறுவன் அந்த பாம்பின் மீது மிதிக்க பார்த்த நிலையில், அந்த பாம்பு உடனடியாக சிறிது தூரம் பின்வாங்கிவிட்டு பின்னர் அந்த சிறுவனை தீண்ட வருகிறது.


இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த தாய் உடனடியாக சிறுவனை அங்கிருந்து தூக்கிக்கொண்டு ஓடினார். தாய் மின்னல் வேகத்தில் செயல்பட்டு மகனை காப்பாற்றியதால் அந்த சிறுவன் பாம்பு தீண்டுவதில் இருந்து காப்பாற்றப்பட்டான். பின்னர் சிறிது நேரத்தில் அந்த பாம்பு அங்கிருந்து சென்றது. இந்த வீடியோ எதிர்வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.