ஆங்கிலம் இணைப்பு மொழி, தமிழ் தாய்மொழி - ஓ.பன்னீர்செல்வம்

 
ops

தமிழகத்தை பொறுத்தவரை பேரறிஞர் அண்ணாவின் இரட்டை மொழிக் கொள்கைக்கு ஆதாரமாக உள்ளதாகவும், எனவே ஆங்கிலம் இணைப்பு மொழி, தமிழ் தாய்மொழி என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

சட்டமேதை அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் நாடு முழுவது உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய தலைவர்கள் பலரும் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இதேபோல் பல தலைவர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில், சட்டமேதை அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள்யொட்டி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் . இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், சென்னை மாவட்ட மூத்த அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

ops

அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:   தமிழகத்தை பொறுத்தவரை பேரறிஞர் அண்ணாவின் இரட்டை மொழிக் கொள்கைக்கு ஆதாரமாக உள்ளது. எனவே ஆங்கிலம் இணைப்பு மொழி, தமிழ் தாய்மொழி என தெரிவித்தார்.