இபிஎஸ் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா - அதிமுக அறிவிப்பு..

 
ep

அதிமுக சார்பில்  இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்,  சென்னை வானகரத்தில் வருகிற 19-ந் தேதி  கிறிஸ்துமஸ் விழா இடைக்கால  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதுகுறித்து  அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ அ.தி.மு.க. சிறுபான்மை, மக்களின் பாதுகாப்பு அரணாக என்றென்றும் விளங்கி வருகிறது. புரட்சி தலைவி அம்மா கிறிஸ்தவ பெருமக்களை கவுரவிக்கும் விதமாக, கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை நடத்தி வந்துள்ளார். அந்த வகையில் இந்த ஆண்டும், அ.தி.மு.க. சார்பில் இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வருகிற 19-ந் தேதி மாலை 5 மணியளவில் சென்னை, வானகரம், ஜீசஸ் கால்ஸ் வளாகத்தில் அமைந்துள்ள விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை நடத்த உள்ளார்.

இபிஎஸ் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா - அதிமுக அறிவிப்பு.. 

இந்த நிகழ்ச்சியில் கிறிஸ்தவ பேராயர்கள், ஆயர்கள், போதகர்கள் மற்றும் கிறிஸ்தவ பெருமக்கள் தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட கழகச் செயலாளர்கள், கழக பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.