“ஜெயக்குமாரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்ய நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” - கோவை செல்வராஜ் எச்சரிக்கை!!

 
tn

எடப்பாடி பழனிசாமிக்கு துதி பாடும் குழுவைத்தான் ஜூலை 11ம் தேதி நடத்த திட்டமிடுகின்றனர் என்று  கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

ops

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ், "தலைமை கழகம் என்ற பெயரில் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இன்றி அழைப்பிதழ் விடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் தலைவர் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் தான், அதற்கு பிறகே ஈபிஎஸ். அதிமுகவில் நிலவும் ஒட்டுமொத்த பிரச்சினைக்கும் எடப்பாடி பழனிசாமி தான் காரணம். அதிமுகவில் சதி செய்தது ஈபிஎஸ் தான். ஒருங்கிணைப்பாளரை மாற்றும் அதிகாரம் ஈபிஎஸ்க்கு இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கு துதி பாடும் குழுவைத்தான் ஜூலை 11ம் தேதி நடத்த திட்டமிடுகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் 3 பேர் ஓபிஎஸ் காலில் விழுந்து ஆட்சியை காப்பாற்ற சொன்னார்கள்" என்றார்.

eps

தொடர்ந்து பேசிய அவர், "ஆட்சியை காப்பாற்ற ஓபிஎஸ் வேண்டும்...ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் முதுகில் குத்துகின்றனர். 30 மாவட்ட செயலாளர்களை வைத்துக்கொண்டு கட்சியை கம்பெனி போல் செயல்படுத்துகிறார்கள். கட்சியை நாங்கள் வழிநடத்தி செல்லுவோம். உதவி கேட்டு வந்த பெண்களை மானபங்கம் படுத்தியதால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டிய ஜெயக்குமாரை,  ஈபிஎஸ் காப்பாற்றினார். இப்போது அப்பெண்களை வழக்கு தொடுக்க வைத்து, அவரை சிறைக்கு அனுப்புவோம்" என்றார்.