பல மாவட்டங்களில் நேற்று மின்வெட்டு...உரிய நடவடிக்கை வேண்டும் - ராமதாஸ் ட்வீட்!!

 
PMK

தமிழகத்தில் மின்வெட்டை தவிர்க்க நடவடிக்கை வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.rn

தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது.  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி, கன்னியாகுமரி மாவட்டம் , கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்,  அதன் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், திருமங்கலம், கடலூர் மாவட்டம் முழுவதும் என மின்வெட்டு ஏற்பட்டு பொதுமக்களை பாதிப்புக்கு உள்ளாகியது.  இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது. இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க  நமது வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றார். 

senthil balaji

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று ஏற்பட்ட மின்வெட்டால் பொதுமக்கள் தாங்க முடியாத அவதிக்கு ஆளானார்கள். சில மாவட்டங்களில் சில மணி நேரமும், திருவாரூர் மாவட்டத்தின் சில இடங்களில் 6 மணி நேரம் வரையிலும்  மின்வெட்டு நீடித்தது. இனி இப்படி நிகழக்கூடாது!அறிவிக்கப்படாத மின்வெட்டால் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களால் படிக்க முடியவில்லை. விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாய்ச்ச முடியாமல் உழவர்கள் சிரமப்பட்டனர். இரவில் உறங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது! மத்தியத் தொகுப்பிலிருந்து 750 மெகாவாட் மின்சாரம் தடை பட்டது தான் மின்வெட்டுக்கு காரணம் என்று மின்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். அது உண்மையாக இருக்கலாம்.

tn

ஆனால், இத்தகைய எதிர்பாராத நிகழ்வுகளை சமாளித்து மக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்குவது தான் மின்வாரியத்தின் பணியாகும்! தமிழ்நாடு மின்மிகை மாநிலமல்ல.... தற்சார்பு மாநிலமும் அல்ல.  தமிழகத்தின் மின் தேவையில் மூன்றில் இரண்டு பங்கு தனியாரிடமிருந்தும், மத்தியத் தொகுப்பிலிருந்தும் தான் வாங்கப்படுகிறது. அதில் தடை ஏற்பட்டால் சமாளிக்க மாற்றுத் திட்டம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்! நிலக்கரி பற்றாக்குறையால் மின்வெட்டு ஏற்படக்கூடும்; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கடந்த 13-ஆம் தேதி தான் நான் எச்சரித்திருந்தேன்.  நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொண்டு இனிவரும் காலங்களிலாவது மின்வெட்டை தவிர்க்க நடவடிக்கை வேண்டும்!" என்று கோரிக்கை வைத்துள்ளார்.