நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் அனுமதி - காரணம் இதுதான்!

 
sarathkumar

பிரபல நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவருமான சரத்குமார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விழங்கி வருபவர் சரத்குமார். இவர் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், சரத்குமார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி அவரது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து சரத்குமார் தரப்பில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சரத்குமார் தரப்பில் வெளியிடப்பட்டுள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சரத்குமார் சிறு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனை சென்றிருந்தார். பரிசோதனை நிறைவு செய்து தற்போது பூரண நலத்துடன் சென்னை வந்துகொண்டிருக்கிறார். யாரும் எந்த ஒரு வதந்தியையும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.