கருத்துச் சுதந்திரம் கேட்கும் எதிர்க்கட்சிகள் இளையராஜாவின் கருத்தை ஏன் ஏற்க முடியவில்லை? - குஷ்பு கேள்வி

 
Kushboo

கருத்துச் சுதந்திரம் கேட்கும் இடதுசாரி எதிர்க்கட்சிகள், இளையராஜாவின் கருத்துக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். 

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு,  பாரதிய ஜனதா கட்சி சார்பில் சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் தூய்மைப் பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் மேலிட  இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி நிர்வாகிகள் கரு.நாகராஜன், தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் நடிகை குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

kushboo

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை குஷ்பு பேசியதாவது: பாரதிய ஜனதாக் கட்சியின் ஆண்டு தினத்தை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக இன்றுதூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுகிறோம். மத்திய அரசு  கருத்து சுதந்திரம் அளிக்க வில்லை என்று குற்றச்சாட்டு தெரிவிக்கும் இடதுசாரி எதிர்க்கட்சிகள் தான் இன்று ஒன்று திரண்டு அம்பேத்கர் மோடி குறித்த இளையராஜாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கருத்துச் சுதந்திரம் கேட்கும் எதிர்க்கட்சிகள் ஏன் இளையராஜாவின் கருத்தை ஏற்க முடியவில்லை என்று கூறினார்.