பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை - சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த அன்புமணி வேண்டுகோள்..

 
anbumani

பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு உள்ள  தடை சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி  ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ இந்தியா முழுவதும் பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்வதற்கான சட்டம், 14 ஆண்டுகளுக்கு முன் இதே காந்தி பிறந்த நாளில், நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது, நீண்ட அரசியல், சட்டப் போராட்டத்திற்கு பிறகு நடை முறைப்படுத்தப்பட்டது. அது ஒரு வரலாற்று நிகழ்வு. புகைத்தடை சட்டம் இன்று வரை ஏட்டில் இருந்தாலும் நடைமுறையில் இல்லை என்பது தான் வேதனையான உண்மை.

பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை - சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த அன்புமணி வேண்டுகோள்..

இந்தியாவில் புகை பிடிப்பதால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். பிறர் பிடித்து விடும் புகையை சுவாசிப்பதால் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் இறக்கின்றனர். இதைத் தடுக்க பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் காந்தியடிகள் பிறந்த இந்த நாளில் இருந்து தீவிரமாக செயல்படுத்த வேண்டும். ” என்று குறிப்பிட்டுள்ளார்.