தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசில் புகார்!!

 
annamalai

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தனது ட் விட்டர் பக்கத்தில் பட்டியலின மக்களை இழிவுபடுத்தி பேசியதாக புகார் எழுந்தது.  பிரதமர் நரேந்திர மோடி எட்டு ஆண்டுகள் ஆட்சி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அண்ணாமலை, நம்பிக்கை அற்ற நிலையிலிருந்து நம்பிக்கையையும், இருளிலிருந்து ஒளியையும், பறையரிலிருந்து விஸ்வகுரு உயர் நல்ல நிலைக்கு மாற்றம் செய்துள்ளார் என்று கூறியிருந்தார்.

ANNAMALAI

ஒரு சமூகத்தில் உயர்வு அடைந்த நிலையிலுள்ள பட்டியலின சமூகத்தினரை பழைய நிலை என்றும் நல்ல நிலை என்பது விஸ்வகுரு என்றும் பொதுவெளியில் பதிவு செய்திருப்பது மிக மோசமான நிலையை காட்டுகிறது என்று காஞ்சிபுரம் மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் பாசறை செல்வராஜ்  அண்ணாமலை மீது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். 

இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசில் மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. மோடி ஆட்சியை புகழ்வதற்காக பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் வகையில் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டதாக, தந்தை பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்ட செயலாளர் குமரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.