பாஜகவில் மீண்டும் இணைகிறார் அர்ஜூனமூர்த்தி

 
tn

இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி தலைவரான அர்ஜுன மூர்த்தி மீண்டும் பாஜகவில் இணைகிறார்.

tn

 நடிகர் ரஜினிகாந்த் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக கடந்த 2020 ஆம் ஆண்டு அர்ஜுன மூர்த்தி நியமிக்கப்பட்டார். அர்ஜுன மூர்த்தி பாஜகவின் அறிவுசார் குழுவின் தலைவராக இருந்து வந்தார். ஆனால்  ரஜினி அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பால் பாஜகவிலிருந்து விலகி ரஜினியுடன் கைகோர்த்தார். இதை தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நிலை காரணமாக தான் கட்சி தொடங்கப்போவதில்லை என  ரஜினிகாந்த்  அறிவித்தார். இது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது. 

ரஜினியின் முடிவுக்கு என் ஆதரவை முழு மனதுடன் தெரிவித்துக்கொள்கிறேன்- அர்ஜூனமூர்த்தி

இது தொடர்பாக கருத்து  தெரிவித்த  அர்ஜூன மூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “ரஜினியின் இதயம் தற்போது மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறது என்பதை நன்றாக அறிவேன். ரஜினியின் முடிவுக்கு என் ஆதரவை முழு மனதுடன் தெரிவித்துக்கொள்கிறேன்”  என்று கூறியிருந்தார்.  இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கிய அவர்  தொடர்ந்து ரஜினியுடன் நட்புடன்  பழகி வருகிறார்.

அர்ஜுன மூர்த்தி என் தந்தையின் ஆலோசகராக இருந்தவரா? தயாநிதி மாறன் மறுப்பு! 

இந்நிலையில் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி தலைவரான அர்ஜுன மூர்த்தி இன்று மீண்டும் பாஜகவில் இணைகிறார். அண்ணாமலை முன்னிலையில் இன்று மதியம் 1  மணிக்கு கமலாலயத்தில் பாஜகவில் அவர் இணையுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.