"இலங்கை கடற்படையின் தாக்குதல் மனிதநேயமற்ற செயல்" - முற்றுப்புள்ளி வைக்க ஓபிஎஸ் கோரிக்கை!!

 
ops

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அண்மைக் காலமாக இந்திய எல்லைக்குள் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வரும் தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதையும், அவர்களின் படகுகளை சிறைபிடிப்பதையும் இலங்கை கடற்படையினர் வாடிக்கையாகக் கொண்டிருப்பது மிகுந்த கவலை அளிப்பதோடு, தமிழக மீனவர்கள் ஒருவிதமான பதற்றத்துடனும், அச்ச உணர்வுடனும் தங்களுடைய மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

Ops

2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் மூன்று முறை இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதன் விளைவாக 68 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுடைய பத்து படகுகள் சிறை பிடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 23ஆம் தேதி  அன்று நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மூன்று தமிழக மீனவர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதுடன் அவர்களுடைய உபகரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக, நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த மாதம் 31 ஆம் தேதி அன்று இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்திய எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அவர்களுடைய விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது. அன்றே வேறொரு படகில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஒன்பது பேர் கோடியக்கரைக்கு தெற்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைப் படையினர் 9 இந்திய மீனவர்களையும் அவர்கள் வந்த விசைப்படகினையும் சிறைபிடித்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, கடந்த 7ஆம் தேதி அன்று தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை மீன் பிடிக்கவிடாமல் விரட்டியடித்ததோடு, மூன்று படகுகளையும், 11 மீனவர்களையும் சிறைபிடித்து காங்கேசன் துறைமுகம் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர், இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களை இந்த மாதம் 22-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

ops

தமிழக மீனவர்கள் மீதான இதுபோன்ற தாக்குதலை ஒரே மாதிரியான முறையில் இலங்கை கடற்படையினர் அல்லது சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் இலங்கையைச் சார்ந்தவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழக மீனவர்களை தாக்குவது, அவர்களது உபகரணங்களை திருடிச் செல்வது, மீன் வலைகளை சேதப்படுத்துவது, அவர்கள் வைத்திருந்த மீன்களை திருடிச் செல்வது, படகுகளை சிறைபிடிப்பது என பல நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது தவிர, ஏற்கெனவே பிடிக்கப்பட்ட படகுகளை ஏலம் விடும் பணியையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் இதுபோன்ற நடவடிக்கைகள் கடும் கண்டனத்திற்குரியது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது, ஏதோ ஒரு நோக்கத்தை மனதில் வைத்துக் கொண்டு இதுபோன்ற நடவடிக்கைகளை இலங்கைக் கடற்படை எடுக்கிறதோ என்ற எண்ணம் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

இலங்கையில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள நெற் பயிர் மூழ்கியுள்ளதையடுத்து, அங்குள்ள மக்கள் அதிக விலை கொடுத்து அரிசியை வாங்குகின்ற நிலையில், இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இலங்கை நாட்டிற்கு மூன்று லட்சம் டன் அரிசி விநியோகம் செய்ய இந்தியா ஒப்புக் கொண்டுள்ள நிலையில், இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குகிறது என்பது வேதனை அளிக்கும் செயலாகும். இந்தியா மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசுக்கு உதவி புரிகின்ற சூழ்நிலையில், இந்திய மீனவர்களுக்கு எதிராக இலங்கை கடற்படைத் தாக்குதல் நடத்துவது மனிதநேயமற்ற செயல்.எனவே, தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், தமிழக மீனவர்கள் தங்களது மீன்பிடித் தொழிலை அச்சமின்றி மேற்கொள்ளவும், மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். இதன் தொடர்ச்சியாக, 7ஆம் தேதி  அன்று தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை மீன் பிடிக்கவிடாமல் விரட்டியடித்ததோடு, மூன்று படகுகளையும், 11 மீனவர்களையும் சிறைபிடித்து காங்கேசன் துறைமுகம் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர், இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களை இந்த மாதம் 22-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

ops

தமிழக மீனவர்கள் மீதான இதுபோன்ற தாக்குதலை ஒரே மாதிரியான முறையில் இலங்கை கடற்படையினர் அல்லது சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் இலங்கையைச் சார்ந்தவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழக மீனவர்களை தாக்குவது, அவர்களது உபகரணங்களை திருடிச் செல்வது, மீன் வலைகளை சேதப்படுத்துவது, அவர்கள் வைத்திருந்த மீன்களை திருடிச் செல்வது, படகுகளை சிறைபிடிப்பது என பல நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது தவிர, ஏற்கெனவே பிடிக்கப்பட்ட படகுகளை ஏலம் விடும் பணியையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் இதுபோன்ற நடவடிக்கைகள் கடும் கண்டனத்திற்குரியது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது, ஏதோ ஒரு நோக்கத்தை மனதில் வைத்துக் கொண்டு இதுபோன்ற நடவடிக்கைகளை இலங்கைக் கடற்படை எடுக்கிறதோ என்ற எண்ணம் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

இலங்கையில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள நெற் பயிர் மூழ்கியுள்ளதையடுத்து, அங்குள்ள மக்கள் அதிக விலை கொடுத்து அரிசியை வாங்குகின்ற நிலையில், இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இலங்கை நாட்டிற்கு மூன்று லட்சம் டன் அரிசி விநியோகம் செய்ய இந்தியா ஒப்புக் கொண்டுள்ள நிலையில், இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குகிறது என்பது வேதனை அளிக்கும் செயலாகும். இந்தியா மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசுக்கு உதவி புரிகின்ற சூழ்நிலையில், இந்திய மீனவர்களுக்கு எதிராக இலங்கை கடற்படைத் தாக்குதல் நடத்துவது மனிதநேயமற்ற செயல்.எனவே, தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், தமிழக மீனவர்கள் தங்களது மீன்பிடித் தொழிலை அச்சமின்றி மேற்கொள்ளவும், மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.