"பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த சிவரஞ்சனிக்கு விருது" - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 
tn

முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த சிவரஞ்சனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

tn

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த குரவபுலம் கிராமத்தை சேர்ந்த சிவரஞ்சனி. பொறியியல் பட்டதாரியான இவர் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்கும் பணியில் முனைப்பு காட்டி வருகிறார் .விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் நெல் உள்ளிட்ட தானியங்கள், காய்கறிகள் பயிரிடுதல்லில்  ஆர்வமாக உள்ளவர். அத்துடன் பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்து வரும் இவர் தமிழக நெல் ரகமான 174 உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வழக்கொழிந்த பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டுள்ளார். இவரின் முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

govt

இந்நிலையில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நாகப்பட்டினத்தை சேர்ந்த சிவரஞ்சனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நெல்  ஜெயராமனுக்கு பின் பல மாநிலங்களுக்கு சென்று 1250 நெல் ரகங்களை மீட்டு எடுத்தவர் சிவரஞ்சனி. இதன் காரணமாக முதலமைச்சர் மாநில விருது இளைஞர் விருதுக்கு தேர்வாகியுள்ள இவருக்கு சுதந்திர தின விழாவில் விருதும் ,ஒரு லட்சம் பரிசு தொகையும் முதலமைச்சர் வழங்கி சிறப்பிக்க உள்ளார்.