தி.மு.க.இந்து விரோத கட்சி மட்டுமல்ல, தேசவிரோத கட்சியும் கூட - ஹெச்.ராஜா

 
h

தி.மு.க.இந்து விரோத கட்சி மட்டுமல்ல, தேசவிரோத கட்சியும் கூட பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார். 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:  தி.மு.க., அரசு தீய சக்திகளை அரசு பொறுப்பில் நியமித்து அவர்கள் மூலம் ஹிந்து மதத்தை இழிவுபடுத்தி வருவது கண்டிக்கத்தக்கது. லியோனி போன்றவர்களை பதவியிலிருந்து நீக்க வேண்டும். இதை செய்தால் தான் முதல்வர் நாகரீகமானவர் என மக்கள் கருதுவர். தவறினால் அவர் கூறி தான் இதெல்லாம் நடப்பதாக மக்கள் நினைப்பர்.தி.மு.க. இந்து விரோத கட்சி மட்டுமல்ல தேசவிரோத கட்சியும் கூட. இந்து முன்னணி நிர்வாகி கனல்கண்ணனை கைது செய்த தமிழக அரசு நடராஜபெருமானை அவதூறாக பேசிய யூடியூப் புரூட்டர்ஸ் மைனர் விஜயை ஏன் கைது செய்யவில்லை .ஆளுங்கட்சி எடுபிடியாக போலீஸ் துறை செயல்படுகிறது. இந்து மதத்தை இழிவுபடுத்துபவரை போலீசார் கைது செய்வதில்லை. 

h

தொடர்ந்து பேசிய அவர், வெளிநாட்டில் இரண்டு கம்பெனிகளை காலி செய்து விட்டு இங்கு வந்தவர் தான் தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன். தமிழகத்தை திவாலாக்க முடிவு செய்து 15 மாதங்களில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளார். மின் துறையில் வேலையாட்களை காலி செய்து விட்டு மின் கணக்கீடுக்கு ஒப்பந்த தொழிலாளர்களை நியமித்துள்ளனர். கணக்கெடுப்புக்கு செல்லாமல் கணக்கிடுகிறார்கள். கால்நடைகளுக்கான அனைத்து தீவனங்களும் விலை உயர்ந்துள்ள நிலையில் பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் விவசாயிகளின் வயிற்றில் அடித்து, விவசாயிகளின் விரோதியாக தி.மு.க., அரசு செயல் படுகிறது. இவ்வாறு ஹெச்.ராஜா கூறினார்.