அதிமுகவை பாஜக கட்டுப்படுத்தவில்லை - எடப்பாடி பழனிசாமி

 
tn

அதிமுக தலைமையில்தான் மெகா கூட்டணி என்பதில் உறுதி என்று  ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.

tn

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில், அதிமுக  இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கழக வளர்ச்சிப் பணிகள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கழக நிர்வாகிகள், அனைத்து மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

tn

இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "நாடாளுமன்ற தேர்தல் பணியை தொடங்குங்கள். அதிமுக தலைமையில் தான் மெகா கூட்டணி அமையும். கூட்டணியில் எந்த கட்சிக்கு எவ்வளவு இடம் என்பதை அதிமுக தலைமை தான் முடிவு செய்யும். கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக தலைமை பார்த்துக் கொள்ளும். கட்சியை வலுப்படுத்த கவனம் செலுத்த வேண்டும்.  நிர்வாகிகளும், தொண்டர்களும்  உறுதியாக இருந்தால் எதிரிகளை வீழ்த்துவது எளிது. வாக்கு சாவடி அளவில் கட்சியை பலப்படுத்த வேண்டும். திமுக குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து நேரத்தை வீணடிக்காமல் மக்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும். சட்ட போராட்டங்கள் குறித்து கவலை கொள்ளாமல் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்துங்கள். பாரதிய ஜனதா கட்சி அதிமுகவை எந்தவிதத்திலும் கட்டுபடுத்தவில்லை.  100 சதவீதம் இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் என்று எப்போதும் வற்புறுத்தியதில்லை " என்றார்.