பெண் காவலருக்கு கொலை மிரட்டல் - பாஜக இளைஞரணி தலைவர் கைது

 
BJP

கள்ளக்குறிச்சியில் பெண் காவலரிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த கள்ளக்குறிச்சி பாஜக இளைஞரணி தலைவரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சியை அடுத்த கோட்டைமேடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகள் சவிதா கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் எஇலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இதேபோல் கள்ளக்குறிச்சி எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த பரமசிவன் என்பவரது மகன்  ரஞ்சித்குமார் கள்ளக்குறிச்சி பாஜக இளைஞரணி தலைவராக உள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில்,  கள்ளக்குறிச்சி துருவம் சாலையில் நின்று கொண்டிருந்த சவிதாவிடம், ரஞ்சித் முப்பதாயிரம் ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும், தரவில்லையெனில் கொலை செய்துவிடுவேன் என  மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சவிதா கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரஞ்சித்குமாரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.