#Breaking: ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன், எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா காலமானார்...

 
#Breaking: ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன், எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா காலமானார்...  Thirumahan MLA


ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான  திருமகன் ஈவெரா திடீரென  காலமானார்..

evks elangovan

ஈரோடு மாவட்டம் கிழக்கு தொகுதி, காங்கிரஸ்  சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தவர் திருமகன் ஈவெரா... இவர் திடீரென ஏற்பட்ட  மாரடைப்பு காரணமாக  காலமானார்.  இவர் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் ஆவார்..  திருமகன் ஈ.வெ.ரா ,  2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார்.   45 வயதாகும் இவர் தமிழக காங்கிரஸ் கட்சியில் மாநில பொதுச் செயலாளராகவும் இருந்து வந்தார். ஈரோட்டில் 59 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைத்த சிறப்பு திருமகனுக்கு உண்டு.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான  திருமகன் ஈவெரா திடீரென  காலமானார்..   ஈரோடு மாவட்டம் கிழக்கு தொகுதி, காங்கிரஸ்  சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தவர் திருமகன் ஈவெரா... இவர் திடீரென ஏற்பட்ட  மாரடைப்பு காரணமாக  காலமானார்.  இவர் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் ஆவார்..  திருமகன் ஈ.வெ.ரா ,  2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார்.   45 வயதாகும் இவர் தமிழக காங்கிரஸ் கட்சியில் மாநில பொதுச் செயலாளராகவும் இருந்து வந்தார். ஈரோட்டில் 59 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைத்த சிறப்பு திருமகனுக்கு உண்டு.   இந்நிலையில்  கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த அவருக்கு,  இன்று மதியம் திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.  ஆனால் வரும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் ஈரோடு கச்சேரி சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது.  சென்னையில் இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மகன் இறப்பு பற்றி தகவல் அறிந்ததும்  கடும் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உடனடியாக அவர் ஈரோட்டுக்கு புறப்பட்டு சென்றார்.   திருமகன் மரணம் செய்தியை கேட்டதும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.  தொடர்ந்து பலர் அவரது  வீட்டுக்கு  சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். தந்தை பெரியாரின் கொள்ளு பேரனான இவர், 59 ஆண்டுகளுக்குப் பிறகு   முதல் முதலாக சட்டசபைக்கு சென்றதால் ஈரோடு காங்கிரஸ் கட்சியினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்காத அளவுக்கு திருமகன் மரணம் அடைந்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

இந்நிலையில்  கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த அவருக்கு,  இன்று மதியம் திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.  ஆனால் வரும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் ஈரோடு கச்சேரி சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது.  சென்னையில் இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மகன் இறப்பு பற்றி தகவல் அறிந்ததும்  கடும் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உடனடியாக அவர் ஈரோட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

திருமகன் மரணம் செய்தியை கேட்டதும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.  தொடர்ந்து பலர் அவரது  வீட்டுக்கு  சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். தந்தை பெரியாரின் கொள்ளு பேரனான இவர், 59 ஆண்டுகளுக்குப் பிறகு   முதல் முதலாக சட்டசபைக்கு சென்றதால் ஈரோடு காங்கிரஸ் கட்சியினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்காத அளவுக்கு திருமகன் மரணம் அடைந்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.