அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
MK Stalin

மதுரை பெருங்குடி விமான நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர்.

மதுரையில் இருவேறு  நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு மதுரைக்குச் சென்றார்.  அங்கு தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம்  மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில்  செயல்படுத்தப்படும்  தூய்மை பணியாளர்களை மேம்பாட்டு திட்டத்தை மதுரை மாநகராட்சியில் உள்ள வளாகத்தில் தொடங்கி வைத்துள்ளார்.   தொடர்ந்து அதற்கான லட்சினையையும் வெளியிட்டார்.  சென்னை மாநகராட்சியில் இருக்கின்ற மண்டலம் 6, மதுரை மாநகராட்சியில் இருக்கின்ற மண்டலம் 3, பொள்ளாச்சி, புதுக்கோட்டை மற்றும் சேரன்மாதேவி ஆகிய பேரூராட்சிகளில் முதற்கட்டமாக இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

அதன் பின்னர் மதுரை பெருங்குடி விமான நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மூத்த அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.