நடிகர் ராமராஜனுக்கு எதிரான வழக்கு ரத்து
நடிகர் ராமராஜனுக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மக்கள் நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர் ராமராஜன். அதிமுகவின் முன்னாள் எம்பியுமான ராமராஜன், அதிமுகவுக்கு ஆதரவாக தொடர்ந்து தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக ராமராஜன் பிரச்சாரம் செய்தபோது, கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி தென்னிலை 4 ரோடு சந்திப்பில் மே 18ஆம் தேதி என்று பிரச்சாரம் செய்தார். பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தென்னிலை போலீசார் ராமராஜன் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இது தொடர்பான வழக்கு கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் ராமராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தார். அதாவது புகார் கொடுத்த போது ஊழியரிடம் இருந்து எந்த ஆதாரங்களும் கேட்காமல் வழக்கினை விசாரணைக்கு ஏற்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய அனுமதி அளித்திருப்பது சட்ட விதிகளுக்கு முரணானது என தெரிவித்திருக்கிறார்.
நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சட்டத்தில் கூறப்பட்டிருக்கும் நடைமுறைகளைப் பின்பற்றாமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மாஜிஸ்திரேட் அனுமதி அளித்து இருப்பதாகவும் தென்னிலை நாலு ரோடு சந்திப்பு தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதி இல்லை என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது குறித்து மாஜிஸ்திரேட் கவனிக்கத் தவறி இருக்கிறார் என்றும், நாகராஜன் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜெகதீஸ் சந்திரா மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.