தேச பாதுகாப்பில் திமுக ஓட்டு வங்கி அரசியல் செய்யக்கூடாது - எல்.முருகன் காட்டம்

 
L Murugan

தேசத்தின் முக்கியத்துவம் தெரியாமல் திமுக தவறான ஓட்டி வங்கி அரசியல் செய்ய கூடாது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது: இரு நாட்களுக்கு முன், நாடு முழுதும் என்.ஐ.ஏ., சோதனை நடைபெற்றது. தேசத்துக்கு எதிராகவும், நாட்டின் பாதுகாப்புக்கு எதிராகவும், அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆனால், தி.மு.க., செய்தி தொடர்பாளர் இளங்கோவன், என்.ஐ.ஏ., தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். என்.ஐ.ஏ., சோதனையில் பல ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.தேச பாதுகாப்பில் விளையாடக்கூடாது. தேச பாதுகாப்பின் முக்கியத்துவம் தெரியாமல், தவறான ஓட்டு வங்கி அரசியல் செய்யக்கூடாது.  கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பா.ஜ.க. கட்சி நிர்வாகிகள், இந்து அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள், வாகனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களை குறி வைத்து, ஒரு கும்பல் கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. தமிழக அரசு, இதில் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.