தமிழகத்தில் உள்ள ரயில்வே பணியாளர்கள் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் - மத்திய ரயில்வே துறை அமைச்சர்

 
ashwini

தமிழகத்தில் உள்ள ரயில்வே பணியாளர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் கற்றுக்கொள்ள வேண்டும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் வலியுறுத்தியுள்ளார். 
 

சென்னை பெரம்பூர், ஐ.சி.எப்., தொழிற்சாலையில், முதல்முறையாக உள்நாட்டு தொழில் நுட்பத்தில், 97 கோடி ரூபாய் செலவில், அதிநவீன விரைவு ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சென்னையில் உள்ள இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் உருவாக்கப்படும் வந்தே பாரத் ரயில் பெட்டிகளின் மாதிரிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: பிரதமரின் நோக்கம் இந்திய ரயில்வே துறையை உலக தரத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, சென்னை இணைப்புப் பெட்டித் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில்கள் உலகத்தரம் வாய்ந்த ரயில் சேவையாக உருவாக்கப்படுவது பெருமையாக உள்ளது, நாடு முழுவதும் மக்கள் இந்த பாதையில் பயணிக்க உள்ளனர்.தமிழகத்தில் தமிழகத்தில் உள்ள சென்னை எழும்பூர், காட்பாடி, மதுரை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம் ஆகிய ஐந்து ரயில் நிலையங்கள் உட்பட நாடு முழுவதும் 30 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காக இந்த பட்ஜெட்டில் 3 ஆயிரத்து 865 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது, இது காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட நிதியை விட மூன்று மடங்கு அதிகம்.ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை, ரயில்வே துறையை முன்னேற்றத்திற்கு கொண்டு  சென்று தரமான ரயில்கள் நல்ல பயண அனுபவத்தை பயணிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே தற்போதைய நோக்கம்.

icf

ரயில் தண்டவாளங்களை யானைகள் கடக்கும்போது விபத்துக்குள்ளாகிறது, இதனை தடுக்க ரயில் தண்டவாளங்களை உயர்த்தவும்,யானைகளை கடக்க தரைப்பாலம் அமைக்கப்படும். முதற்கட்டமாக கேரளா, மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் 18 இடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் பணியாற்றும் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மாநில மொழி கற்க வேண்டும், மொழி தெரியாமல் உள்ளதால், பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதற்காக இந்தியாவில் பல்வேறு சிறப்பான மொழிகள், கலாச்சாரம் நிறைத்துள்ளது  இதனால் தமிழகத்தில் உள்ள ரயில்வே ஊழியர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் தெரிவித்தார். முன்னதாக   சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், பராமரிப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்த அவர் ரயில் பயணிகளிடமும்  பராமரிப்பு பணிகள் மற்றும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.