"அடுத்த 5 நாட்களுக்கு மழை" டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என எச்சரிக்கை!!

 
rain

மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று தென் தமிழக மாவட்டங்கள் ,தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் ,தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.

rain

நாளை தென் தமிழக மாவட்டங்கள் ,தஞ்சாவூர் ,திருவாரூர் ,நாகப்பட்டினம், மயிலாடுதுறை ,கடலூர் , புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் ,டெல்டா மாவட்டங்கள், மதுரை ,சிவகங்கை ,விருதுநகர் ,ராமநாதபுரம் ,தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

rain

வருகிற 13ம் முதல் 15ம் தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை .காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31, குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை  ஒட்டி இருக்கும்.

rain

மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால்,  மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.  நாளை மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காட்சி 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.