சென்னை சம்பவம்! வைரலாகும் வீடியோ

 
ச்

 வாலிபர் ஒருவரை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்துள்ளனர் ஆறு பேர் கொண்ட கும்பல்.   சென்னை அமைந்தகரையில் பட்டப்பகலில் நடந்திருக்கிறது இந்த பயங்கரம்.

 சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 35).  வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்திருக்கிறார் இவர். இதற்காக அவர் அண்ணா நகரில் அலுவலகம் வைத்திருந்திருக்கிறார். 

 சேத்துப்பட்டில் இருந்து நேற்று மதியம் தனது அலுவலகத்திற்கு பைக்கில் சென்று இருக்கிறார் ஆறுமுகம்.   அப்போது அமைந்தகரை செனாய் நகர் வழியாக சென்றபோது மூன்று மோட்டார் சைக்கிளில் ஆறு பேர் கொண்ட கும்பல் பின்தொடர்ந்து சென்று வழிமறித்து இருக்கிறார்கள்.  பைக்கில் இருந்து இறங்கிய ஆறு பேரும் அரிவாளை எடுத்து வெட்ட ஓடி வந்திருக்கிறார்கள்.  இதை பார்த்து விட்ட ஆறுமுகம் தப்பி ஓடி இருக்கிறார்.

aru

 மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் தான் அவர் ஓடி இருக்கிறார்.   ஆனாலும் அந்த ஆறு பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி ஆறுமுகத்தை சரமாரியாக வெட்டி இருக்கிறது.  கை, கால், உடல், தலை என்று சரமாரியாக வெட்டியதில் ஆறுமுகம் மயங்கி ரத்த வெள்ளத்தில் சரிந்து இருக்கிறார்.  உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்துள்ளனர்.  ஆனால் அவர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அமைந்த கரை போலீசார் விரைந்து வந்து ஆறுமுகத்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு,  கொலை வழக்கு பதிவு செய்த போலீசார்,  ஏன் இந்த கொலை நடந்தது? அந்த கொலையாளிகள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.  அந்த வழியாக அந்த சமயத்தில் காரில் சென்ற ஒருவரும் இதை படம் பிடித்து இருக்கிறார்.  அந்த வீடியோ தற்போது வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.