தென் தமிழக கடலோர பகுதிகளில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

 
rain

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக கடலோர பகுதிகளில் வருகிற 13-ம் தேதி முதல் முன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல், மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வருகிற 13, 14 மற்றும் 15-ம் தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முத மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

met

தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,  காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33  டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் எனவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23  டிகிரி செல்சியஸை ஒட்டி  இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் எந்த பகுதிகளிலும் மழை பெய்யவில்லை எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.