3 சக்கர மின் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

 
ttn

முருகப்பா குழுமத்தைச் சார்ந்த டி.ஐ க்ளீன் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட்" நிறுவனம் தயாரித்துள்ள 3 சக்கர மின் வாகனங்களை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

tn

டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் (TII), நூறு ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் பழம் பெரும் நிறுவனமான முருகப்பா குழுமத்தின் ஒரு அங்கமாகும். இந்தியாவிலேயே, சைக்கிள் உற்பத்தியில் இந்நிறுவனம் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது. முருகப்பா குழுமத்தின் மற்றுமொரு நிறுவனமான, TI Clean Mobility Private Limited, பயணிகளுக்கான மின் ஆட்டோக்கள், மின் சரக்கு வாகனங்கள் மற்றும் E-Rick போன்ற சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத மின் வாகனங்களைத் தயாரிக்க திட்டமிட்டு, TI குழுமம், அம்பத்தூரில் உள்ள தனது TI Cycles வளாகத்தில், 140 கோடி ரூபாய் முதலீட்டில், 580 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், மூன்று சக்கர மின் வாகனங்கள் உற்பத்தி செய்வதற்காக, 20.7.2021 அன்று தொழில் துறை சார்பில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி (GUIDANCE) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

stalin

அதன் அடிப்படையில், TI Clean Mobility Pvt. Ltd., நிறுவனத்தின் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத மோன்ட்ரா (Montra) எனும் வணிகப்பெயரிடப்பட்ட மூன்று சக்கர மின் வாகனங்கள் உற்பத்தியை மேற்கொண்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட ஒரு வருட காலத்திலேயே. இந்த உற்பத்தித் திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.