மாண்டஸ் புயல் - சென்னையில் இன்று இரவு மாநகர பேருந்துகள் இயங்காது

 
bus strike

மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் இன்றிரவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மாண்டஸ் புயல் சின்னம் உருவாகி இருக்கிறது. இந்த புயல் தற்போது வலுவிழந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழையும் அதி கனமழையும் பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், உள்ளிட்ட 6 மாவட்டங்களில் (இன்று) இரவு பஸ்கள் இயங்காது என தமிழக அரசு அறிவித்து இருந்தது.  

இந்நிலையில்,  மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் இன்றிரவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இரவில் 550 பஸ்கள் இயக்கப்படும் நிலையில், இன்று இரவு பேருந்துகள் இயங்காது என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.