12 வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை.. தர்மபுரி அருகே சோகம்..
தர்மபுரி அருகே காதலன் ஏமாற்றியதால் 12 ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர், வீட்டில் தனியாக இருந்த போது தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது மாணவி தீக்குளித்து எரிந்துகொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக , அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனர். ஆனால் அந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், உயிரிழப்பதற்கு முன்பாக மாணவி மரண வாக்குமூலம் அளித்திருக்கிறார். அதில் தான் முனிரத்தினம் என்பவரை காதலித்ததாகவும், அவர் திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்திருக்கிறார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் மாணவி வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுக்குறித்து உயிரிழந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.