காதல் தம்பதியை கடத்திய பெண்ணின் பெற்றோர்... கோவையில் பரபரப்பு!!

 
tn

காதல் தம்பதியை பெண்ணின் பெற்றோரே காரில் கடத்திய சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது.

கோவை மாவட்டம் மணியகாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன்.  இவருக்கும் சினேகா என்பவரும் காதலித்து வந்த நிலையில் , இவர்களின் காதலுக்கு குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலர்களை பிரிக்க குடும்பத்தினர் திட்டமிட்ட நிலையில் , கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த ஜோடி, வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

tn

காதல் ,வீட்டில் எதிர்ப்பு ,தடையை மீறி திருமணம் என கடும் சவால்களை சந்தித்த இவர்கள், திருமணம் முடிந்த கையோடு நேராக சரவணம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதையடுத்து  காதல் ஜோடியை தொடர்பு கொண்ட பெண் வீட்டார் , திருமணம் தான் நடந்து விட்டதே..! விடுங்கள்,  உங்களை நாங்கள் சேர்த்து வைத்து வைக்கிறோம் என்று கூறியுள்ளனர். இதையடுத்து அவினாசி சாலையில் லட்சுமி மில் சிக்னல் அருகில் பெண்ணின் குடும்பத்தினர் வந்த காரில் காதல் ஜோடி ஏறியுள்ளது.

tn

இதையடுத்து அவர்களை மிரட்ட தொடங்கிய குடும்பத்தினர் , இருவரும் அவரவர் வழியில் சென்று விடுங்கள் இல்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதாக தெரிகிறது.  இதனால் பதறிப்போன காதல்ஜோடி கூச்சலிட்டு கத்தியுள்ளனர். காரிலிருந்து கூச்சல் வருவதை கேட்ட அவ்வழியே சென்ற  பொதுமக்கள்,  போக்குவரத்து போலீசில் தகவல் சொன்ன நிலையில் தம்பதி மீட்கப்பட்டனர்.

புதிதாக திருமணம் நடந்ததால் கோயிலுக்கு அழைத்துச் சென்றோம்,  ஆனால் அவர்கள் பயந்து விட்டனர் என்று பெண் வீட்டார் தரப்பில் சொல்ல,  இரு குடும்பத்தாரும் இரு தரப்பையும் அழைத்து சென்று விசாரணை நடத்திய போலீசார்,  அவர்களை எச்சரித்து அனுப்பியது குறிப்பிடத்தக்கது.